NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற மாட்டாரென ஜனாதிபதி தெரிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற மாட்டாரென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் நேற்று இடம்பெற்ற இயலும் லங்கா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க எவ்வாறு அச்சுறுத்தல் விடுக்க முடியும் எனவும், அவர் தேர்தலில் வெற்றியடையப் போவதில்லை என தான் அதனைச் சான்றளிப்பதாகவும் கூறியுள்ளார்.

தெற்கில் உள்ளவர்களையும் வடக்கில் உள்ளவர்களையும் அவர் அச்சுறுத்துகின்றதாகவும், தேசிய மக்கள் சக்தியின் கொள்ளை அவ்வாறு தான் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உடனடியாக வடக்கு மக்களிடம் அனுரகுமார திஸாநாயக்க மன்னிப்பு கோர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles