NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,828 ஆக அதிகரிப்பு..!

கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 218 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 62 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 152 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,828 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3,720 முறைப்பாடுகளும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 28 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles