NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐக்கிய மக்கள் கூட்டணியில் தொடர்ந்தும் அங்கம் வகிப்போம் – மனோ

ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக மாற்றங்கள் நிறைவடைந்ததன் பின்னர், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கூட்டணியாக கலந்துரையாடவுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிப்பதற்கான அடிப்படையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போயுள்ளது. மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது. எனவே, நிச்சயமாக மாற்றமொன்று ஏற்பட வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக மாற்றங்களை செய்துகொண்டதன் பின்னர் கூட்டணியாக கலந்துரையாட முடியும். தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அடிப்படையில் இம்முறை மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மாகாணங்களில் எங்களின் ஆதரவாளர்கள் வாக்குகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். எங்கிருந்தாலும் நாங்கள் நிலைத்திருப்போம்.

இன்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். தொடர்ந்தும் அங்கம் வகிக்கும் விருப்பத்துடனேயே இருக்கிறோம் என்றார்.

Share:

Related Articles