NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ். அனலைதீவு மீனவர்களை விடுதலை செய்யுமாறு மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை..!

சீரற்ற காலநிலையால் இந்தியாவில் கரையொதுங்கிய நிலையில் கைது செய்யப்பட்ட  யாழ். அனலைதீவு மீனவர்களை விடுதலை செய்யுமாறு மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தோடு, எதிர்வரும் மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர் குறித்த மீனவர்கள் விடுதலை செய்யப்படாமல் விட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டந்தை முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles