NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்டவிரோத இரு வாள்களுடன் இளைஞன் ஒருவர் கைது..!

மட்டக்களப்பு ஆரையம்பதியில் சட்டவிரோதமாக இரு வாள்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்யப்பட்ட 25 வயது இளைஞன் ஒருவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (27) பிணையில் விடுவித்தார்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவதினமான நேற்று முன்தினம் வியாழக்கிழமை (26) இரவு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர்  ஆரையம்பதியில் வைத்து சட்டவிரோதமாக 3 அடி நீளம் கொண்ட இரு வாள்களை வைத்திருந்த இருவரை கைது செய்து காத்தான்குடி பொலிசாரிடம் ஓப்படைத்தனர்

இதில்; கைது செய்யப்பட்ட இருவரில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யபபட்ட ஒருவரை பொலிசார் விடுவித்ததுடன் தனது உடமையில் வாள்களை வைத்திருந்த 25 வயது இளைஞனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (27) ஆஜர்படுத்தியபோது நீதவான் அவரை பிணையில் விடுவித்துள்ளார்.  

Share:

Related Articles