NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு இன்று பூட்டு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளை இன்று மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, அம்பலாங்கொடை கல்வி வலயத்திற்குட்பட்ட, பலபிட்டிய கனிஷ்ட வித்தியாலயம், பலபிட்டி ஸ்ரீபதி வித்தியாலயம், பலபிட்டி மாதுவ கனிஷ்ட வித்தியாலயம், ஹிக்கடுவை மலவென்ன வித்தியாலயம், அம்பலாங்கொடை குலரத்ன வித்தியாலயம் மற்றும் காலி கல்வி வலயத்திற்குட்பட்ட கனேகொட ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகியவற்றிற்கே இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று மாத்திரம் மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொலன்னாவ மற்றும் கடுவலை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்றும் மூடப்படவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles