NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியா மகாராஷ்டிராவில் ரத்தன் டாடாவின் பெயரில் பல்கலைக்கழகம்!

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தனது 86 வயதில் வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார்.

பிரபல தொழிலதிபரான இவர் டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் கடமையாற்றினார்.

அவரது சேவைப் பணி மற்றும் தொலைநோக்கு பார்வைக்காக அனைவராலும் பரவலாக அறியப்பட்டவர்.

இந்தநிலையில், மறைந்த ரத்தன் டாடாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மகாராஷ்டிரா மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரினை சூட்டப்படுவதாக அந்தமாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

இதன்படி குறித்த பல்கலைக்கழகம் ரத்தன் டாடா மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles