NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அயராது உழைக்கும் LYCA!

லைக்கா அறக்கட்டளை கடந்த காலங்களில் பின்தங்கிய கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அயராது உழைத்து வருகிறது.

எனவே அத்தகைய மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் கடந்த 21ஆம் திகதி லைக்கா ஞானம் அறக்கட்டளை மொனராகலை சிறிகலவத்த கிராமத்திற்குச் சென்றது.

நமது நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சனையாக குடிநீர் உள்ளது. மொனராகலை சிறிகல வத்தத்த கிராம மக்களுக்கு இது பொதுவான பிரச்சினையாகும்.

அதன்படி, லைக்கா ஞானம் அறக்கட்டளை, சிறிகல வத்த கிராமத்திற்குச் சென்று, அந்தப் பகுதி மக்களுக்கான குடிநீர்த் திட்டப் பணிகளைத் தொடங்கச் சென்றது. இதன் மூலம் ஏறக்குறைய 100 குடும்பங்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லைக்கா ஞானம் அறக்கட்டளை, லைக்கா குழுமம், தமிழ் எப்.எம், ஸ்வர்ணவாஹினி, மொனரா டிவி மற்றும் லைக்கா ஹெல்த் உள்ளிட்ட ஆசியாவின் மிகப்பெரிய ஊடக வலையமைப்பின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் அவரது தாயாரான ஞானாம்பிகை அல்லிராஜா மற்றும் மனைவி கலாநிதி பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரின் இத்தகைய சமூகப் பணிகளும் பங்களிப்புக்களும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles