NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுற்றுலா தளங்கள் தொடர்பில் நிலவும் எச்சரிக்கை நிலைமை எதிர்வரும் நாட்களில் நீக்கப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

அறுகம்பே பகுதியிலுள்ள சுற்றுலா தளங்கள் தொடர்பில் நிலவும் எச்சரிக்கை நிலைமை எதிர்வரும் நாட்களில் நீக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் , கிடைக்கப் பெற்ற தகவல் உண்மையானதா? போலியானதா? என ஆராயப்பட வேண்டும் எனவும் அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles