NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கண்டியின் சில பகுதிகளில் 6 மணிநேரம் நீர் வெட்டு!

கண்டியின் சில பகுதிகளில் திருத்தப்பணிகள் காரணமாக 6 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ரஜபிஹில்ல, கோனிகொட மெதவல, பூஜாப்பிட்டிய , கலகெதர, கிரிஹாகம, பொக்காவல, மாவத்தகம, கொண்டதெனிய, வேகிரிய, யட்டிவாவல, செனரத்கம, நுகவெல, நியங்கொட, உல்லதுபிட்டிய மற்றும் அத்தரகம ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles