NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ் லொறி மோதியதில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

பலாங்கொடை – கதிர்காமம் பிரதான வீதியில் ரஜவக்க பகுதியில் பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 14 பேர் காயமடைந்துள்ளனர் .

பலாங்கொடை பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சிலரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று எதிரில் வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பஸ்சில் பயணித்த 14 பேர் காயங்களுடன் பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles