சுதந்திரம் என்பது தேசத்தின் இறைமை மட்டுமன்று. அது கண்ணியம், நீதி மற்றும் ஒடுக்குமுறை இல்லாத வாழ்வுக்காக அனைவருக்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்துவதாகும்.
இனம், மதம், சாதி, பாலினம் அல்லது வர்க்கம் என்ற பேதமின்றி அனைத்து சமூகங்களும் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பதற்கு சமமான வாய்ப்புகள் கிடைக்கின்ற, அனைவருக்கும் உரிய மதிப்பும் பெறுமானமும் கிடைக்கின்ற ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலமே உண்மையான சுதந்திரம் சாத்தியமாகும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
விளிம்பு நிலை சமூகங்களின் குரல்கள் தன்னெழுச்சியாக வெளிப்படுவதில்லை. அந்தக் குரல்கள் எழுகின்ற வகையில் தீர்மானங்களை மேற்கொள்வதில் அனைவரையும் பங்கேற்கச் செய்யும் ஒரு முறைமையுடன் இலங்கை தேசம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க நாளில், தத்தமது அடையாளக் கொண்டாட்டங்களுக்கு அப்பால் சென்றுஇலங்கை தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனத் தனது வாழ்த்தரையில் மேலும் தெரிவித்துள்ளார்.