NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடன் தொல்லையால் தற்கொலை செய்துக் கொண்ட இளைஞர்…!

முல்லைத்தீவு – கைவேலி பகுதியில் கடன் தொல்லையால் இளைஞர்  ஒருவர் தற்கொலை கொண்ட சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது

புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் தற்கொலை செய்வதற்கு முன்னர் கடிதமொன்றில், கடன் தொல்லையால் தான் தற்கொலை செய்து கொள்வதாக காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த இளைஞனின் சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன

Share:

Related Articles