NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மது உற்பத்தி தொடர்பில் வெளியான பரபரப்பான தகவல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நச்சுத்தன்மை வாய்ந்த மதுபான உற்பத்தி மற்றும் மது பாவனை அதிகரிப்பினால் அரசாங்கத்தின் வரி வருமானம் குறைந்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலைமையயை தொடர்ந்து, அவ்வாறான இடங்களை தேடி மேற்கொள்ளப்படும் சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென அமைச்சு தெரிவித்துள்ளது.

இரத்தினபுரியில் நீண்டகாலமாக இயங்கி வந்த நச்சுத்தன்மை வாய்ந்த மதுபான ஆலையொன்று விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 20 பீப்பாய்கள், 50 நச்சுத்தன்மை வாய்ந்த மதுபான போத்தல்கள், உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் எனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Share:

Related Articles