(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அமெரிக்காவில் ஜூன்டீன்த் விடுமுறை கொண்டாட்டத்தின் போது, திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில், சிறுவர், சிறுமிகள் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
மில்வாக்கி நகரில் கிரேட்டர் பிலடெல்பியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்ததாக நேரில் பார்த்தவர்களும், நேரில் படம் பிடித்த ஒருவரும் உறுதிப்படுத்தினர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 6 பேரில் ஒரு சிறுவன் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், அவன் குற்றவாளியாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில், உயிருக்கு ஆபத்தான அளவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.