(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கை உயர் நீதிமன்றங்களில் 33 சதவீதமான வழக்குகள் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் தொடர்பான வழக்குகள் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சமுதாயத்தை சரியான பாதைக்கு கொண்டு செல்வதை சட்டத்தால் மட்டும் செய்ய முடியாது எனவே அனைவரும் ஒன்றுபட்டு சமுதாய நலனுக்காக உழைக்க வேண்டும் என்கிறார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையில் இரத்தினபுரி புதிய நீதிமன்ற கட்டடத்தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.





