NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொடரும் பஸ் விபத்துக்கள் – துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 7 பேர் காயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த 7 பேர் காயமடைந்துள்ளனர்.

அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த இ.போ.ச பஸ்ஸொன்றும், எதிர்திசையில் பயணித்த சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பஸ்ஸில் பயணித்த 7 பேர் காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles