NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதை நிறுத்தி வெளியிடப்பட்டிருந்த தடையுத்தரவை இடைநிறுத்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.

தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து கடிதம் ஒன்றை அனுப்ப கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு அதிகாரம் இருப்பதாகவும் அந்த உண்மையை மறைத்து அவர் தடையுத்தரவை பெற்றுக்கொண்டுள்ளதாக சுதந்திரக்கட்சியின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Related Articles