NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், திருகோணமலை, பொலனறுவை, மாத்தளை, கண்டி, மட்டக்களப்பு, கேகாலை, நுவுரெலியா மற்றும் பதுளை ஆகிய 12 மாவட்டங்களுக்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை, கேகாலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யவதற்கான சாத்தியம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும். பலத்த மழை மற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Share:

Related Articles