NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரித்தானியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவிலுள்ள Nottingham Trent பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக சென்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த ஒகஸ்ட் மாதம் பிரித்தானியா சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

ஓஷத ஜயசுந்தர என்ற 31 வயதுடைய இலங்கை இளைஞர் நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

Share:

Related Articles