NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலக்கு முடியும் வரை யுக்ரைனில் அமைதி திரும்பாது – புட்டின்

யுக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா போர் சுமார் ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், யுக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இராணுவ உதவி, பொருளாதார ரீதியாக உதவி வருகிறார்கள்.

குறிப்பாக அமெரிக்கா இதுவரை 111 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதி உதவி செய்திருக்கிறது.

எனினும், ரஷ்யா தொடர்ந்து யுக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் யுக்ரைனைக் கொண்டுவர ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், யுக்ரைனில் மொத்தம் 6 இலட்சத்து 17 ஆயிரம் படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். எனவே மேலும் படைகளை அணிதிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. எங்களின் இலக்கு நிறைவடையும் வரை யுக்ரைன் நாட்டில் அமைதி திரும்பாது என தெரிவித்தார்.

ஜனாதிபதியாக கடந்த 24 ஆண்டுக்கு மேல் பதவி வகித்துவரும் புட்டின், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles