NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மண்டைதீவு பொலிஸாரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸாரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக இருவர் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles