NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தோனிக்கு புதிய பொறுப்பு!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2024 தொடர் இம்மாதம் 22ஆம் திகதி தொடங்வுள்ளது.

இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ரொயல் செலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனி தலைவராக களமிறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், 2024 IPL தொடரில் புதிய பொறுப்பை ஏற்க இருப்பதாக மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய பொறுப்பை ஏற்பதில் சுவாரஸ்யமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தோனி ஏற்கவிருக்கும் புதிய பொறுப்பு என்னவென்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles