NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

உகண்டா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உகண்டா பிரஜை ஒருவர் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 31 வயதான உகண்டாவைச் சேர்ந்தவர் எனவும், அவர் கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கிய பின்னர் கட்டாரில் இருந்து இந்த நாட்டுக்கு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்,அந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் 14 கொக்கெய்ன் மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles