NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்காவில் பிரபல திருநங்கை கொலை!

அமெரிக்காவில் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்தவரும் , திருநங்கைகளின் உரிமைக்கு போராடியவருமான நடிகை ரஷிதா வில்லியம்ஸ் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோகோ தா டால் என அழைக்கப்படும் ரஷிதா வில்லியம்ஸ் திருநங்கைகளின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கோகோமோ சிட்டி ஆவணப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

35 வயதான இவர், கறுப்பின திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், ரஷிதா வில்லியம்ஸ் சுட்டு கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் அட்லாண்டாவில் நடைபாதையில் கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவருடன் சேர்த்து இதுவரை 3 திருநங்கைகளின் மர்ம மரணம் தொடர்பில் விசாரணை செய்து வருவதாக அட்லாண்டா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles