NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை – மஹிந்த அதிரடி அறிவிப்பு!

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் ராஜபக்ஷக்கள் தற்காலிக விலகல் ஒன்றையே மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பொதுஜன பெரமுனவின் வெற்றி மிக எளிதாக உள்ளமையால், தான் தற்காலிக ஓய்வு எடுத்துள்ளதாகவும் அரசியல்வாதி ஓய்வு பெறுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ராஜபக்ஷக்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சமூகக் கருத்து எழுந்துள்ள போதும், ஷசீந்திர ராஜபக்ஷ மொனராகலையில் போட்டியிடுவதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.

அத்துடன் பொதுஜன பெரமுன கட்சி 113 ஆசனங்களை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles