NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று சந்திப்பு!

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் அரசியல் கட்சி செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

இதற்கமைய, ஒரு வேட்பாளருக்கு செலவிடப்படும் குறைந்தபட்ச தொகையும் இன்று தீர்மானிக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தவிர தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles