NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரச வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் 112 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

அரசாங்க வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் 112 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் 1,347 வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றில் 150 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாகவும் சுகாதார அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வருடாந்தம் 50 பில்லியன் ரூபாவைச் செலவிடுவதாகவும் மேலும் 40 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு அமைச்சரவை கோரியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles