NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் மற்றும் விருந்துக்கு தடை..!

காலியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் மற்றும் விருந்துக்கு மாவட்ட தேர்தல் சர்ச்சைத் தீர்வு மைய அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவரதன, ரமேஷ் பத்திரன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடலும் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் தேர்தல் சர்ச்சை தீர்வு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles