ஆயுர்வேத துறையின் அபிவிருத்திக்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய ஆயுர்வேத (திருத்த) சட்டமூலத்திற்கு நேற்று (09) சபாநாயகர் தனது ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முதல் இந்த சட்டமூலம் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1961 ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க ஆயுர்வேத சட்டத்தை திருத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆயுர்வேத (திருத்த) சட்டமூலம் செப்டம்பர் 5 ஆம் திகதி வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.