NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இணையவழி வருகை அட்டை முறைமை அறிமுகம்!

அரசாங்கம் இணையவழி வருகை அட்டை முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் இலங்கைக்கான தனது ஆலோசனையை புதுப்பித்துள்ள ஆலோசனையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வெளிநாட்டவர்கள், இலங்கைக்கு வருவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் பூர்த்தி செய்யக்கூடிய இணையம் மூலமான வருகை அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பயணிகளும் இலங்கை அரசாங்கத்தால் சுற்றுலாப் பயணிகளுக்காக விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும் என்பதுடன், இலங்கைக்குள் நுழைவதற்கு மின்னணு பயண அங்கீகாரத்திற்கு வருகை அட்டையை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக பிரித்தானியா வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

வருகைத்தரு விசா வசதிகள் உள்ளபோதும், பயணத்திற்கு முன் வருகை அட்டைக்கு விண்ணப்பிப்பது பயணத்தை எளிதாக்குவதற்கும் வருகையில் தாமதங்களைத் தடுப்பதற்கும் உதவும் என்றும் பிரித்தானிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles