NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்த வருடத்தில் மாத்திரம் 255 கொலைகள் பதிவு – பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இந்த வருடத்தில் இதுவரை 255 கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் 559 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 60 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த வருடத்தில் இதுவரை 34 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனை தொடர்ந்து, நாட்டில் துப்பாக்கிச் சூடு மற்றும் குற்றச்செயல்களை குறைக்கும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share:

Related Articles