NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி!

கல்கிரியாகம, பண்டாரபொதானயில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் படுகாயமடைந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்போகம பண்டாரபொதான பிரதேசத்தில் நேற்று (28) மாலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

பண்டாரபொதான, கல்கிரியாகம, புப்போகமவில் வசித்து வந்த நாவுறு அடுமே பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles