NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையர் – உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இஸ்ரேலில் உயிரிழந்த உடல் இலங்கைக்கு பெண்ணின் உடல் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது அவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

அவரது உடலிலிருந்து துப்பாக்கி ரவைகளின் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு எனினும், குறித்த பெண் தாக்குதல் அல்லது சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவில்லையென பிரேத பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றிய போது கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அப்பெண் உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது இறுதிக் கிரியைகள் களனி – வெவெல்துவ பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles