NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஈராக்கில் உள்ள திருமண மண்டபத்தில் பாரிய தீ விபத்து- 100 பேர் பலி 150 பேர் காயம்…!

ஈராக்கில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்ததுடன் 150 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத் தீ விபத்தானது ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா மாநில அல்-ஹம்டனியா பகுதியில், உள்ளுர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 10..45 மணியளவில் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தீ விபத்து ஏற்பட்டபோது சுமார் 1000 பேர் திருமண  கொண்டாட்டத்தில் இருந்ததாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தீயணைப்பு விரர்கள் தீயை அணைக்க போராடிவரும் நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு ஈராக்கியப் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட வாணவேடிக்கைகளால் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles