NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உச்சம் தொட்ட வெப்பம் – பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இன்று இலங்கையின் 4 மாகாணங்களில் கடுமையான வெப்பம் நிலவுவதற்கான வெப்ப சுட்டெண் அறிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் போதியளவு நீரை அருந்துவதுடன் வெள்ளை நிற இலேசான ஆடைகளை அணியுமாறும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Share:

Related Articles