NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உடற்பிடிப்பு நிலையத்திற்கு வருகைதந்த நபர் திடீர் உயிரிழப்பு!

கந்தானை பகுதியில் உள்ள உடற்பிடிப்பு நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கந்தானை நாகொட பகுதியைச் சேர்ந்த குறித்து நபர் நேற்று (11) நள்ளிரவு மசாஜ் நிலையத்திற்கு வருகைதந்திருந்த நிலையில், இன்று (12) காலை குறித்த நபர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 42 வயதுடைய திருமணமானவர் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளிட்டுள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles