NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஏழு நாடுகளுக்கு மேலும் விசா கட்டண விலக்கு காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது!

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமை காரணமாக ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான வீசா கட்டண விலக்கு மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த வீசா கட்டண விலக்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள அதே நேரம் இந்தியா, ரஷ்யா, சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கே இந்த சந்தர்ப்பம் கிட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles