NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடவத்தை பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கடவத்தை பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு சம்hவமொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடவடத்தை சூரியபல்வ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காயமடைந்த நபரின் சகோதரர், சகோதரரின் மகன் மற்றும் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் காணி தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles