NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கட்டட சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைலெவல் வீதிக்கு அருகில் உள்ள கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஊழியர்கள் மீது கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுவர் விழுந்து காயமடைந்த ஊழியர்கள் இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில். 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மற்றைய நபர் களுபோவில வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles