NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு உகந்தை காட்டுப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறப்பு..!

கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 22ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், கதிர்காமம் செல்லும் உகந்தை காட்டுப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று உகந்தை முருகன் ஆலயத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

முருக பக்தர்கள் பாத யாத்திரையாக உகந்தை வரை சென்று அங்கிருந்து காட்டுப்பாதை ஊடாக கதிர்காமத்தைச் சென்றடைய முடியும்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles