NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு!

பாடசாலை ஒன்றில் நேற்று (04) ஒரு இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியை பார்வையிட்டு விட்டு திரும்பி சென்ற பொழுது வீதியில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

30 வயதுடைய குடும்பஸ்தரே கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பொழுது உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தருமபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles