NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கம்பஹாவின் சில பகுதிகளில் துண்டிக்கப்படவிருக்கும் நீர் விநியோகம்!

கம்பஹாவின் சில பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மின்சார வாரியத்திற்கு சொந்தமான அமைப்பில் அவசியமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதன் காரணமாக இந்த நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதியன்று காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரை இவ்வாறு நீர் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் , பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை நகர சபை பகுதிகள், களனி, பியகம, மஹர, தோம்பே, கடான, மினுவாங்கொட மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதிகளுக்கு நீர் வழங்கல் நிறுத்தப்பட வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ..

Share:

Related Articles