NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்துசெய்ய தீர்மானம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் உடனடியாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அநுருத்த, இவ்வாறான சுமார் 11 இலட்சம் கனரக போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்போது பாவனையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்சமயம் அனுமதிப்பத்திரத்தை கொண்டு அதிக வயதான சாரதிகள் அந்த அனுமதிப்பத்திரத்துடன் வாகனங்களை செலுத்துவதே சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லாத காரணத்தினால், தற்போது சுமார் 08 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles