NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு – கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் பகுதியில் நேற்று முன்தினம் (18) கிணறு சுத்தம் செய்யும் வேளையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் நேற்றைய தினம் (19) தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது பழைய பி.கே.எல்.எம்.ஜி, ஏகே ரவுன்ஸ்கள், 60 எம் செல் 5, டிக்னெட்கள் சாஜஸ்கள் என்பவற்றுடன் பழைய இலத்திரனியல் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles