NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குழந்தைகளிடம் பரவும் புதிய நோய்

இன்ஃப்ளூயன்ஸா போன்ற வைரஸ் நோய்கள் இந்த நாட்களில்
குழந்தைகளிடையே காணப்படுவதாக குழந்தை நல வைத்தியர்
தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கிடையே கண்சார்ந்த நோய் ஒன்று பரவி
வருதாகவும் அது தொடர்பில் பெற்றோர் அவதானத்துடன் செயற்பட
வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கண் சிவப்பாகுதல், கண்ணில் இருந்து நீர் வெளியேறுதல், கண்
அரிப்பு மற்றும் இருமலுடன் தடிமன் போன்ற நோய் அறிகுறிகள்
காணப்படுவதாக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர்
வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் தீபால் பெரேரா
தெரிவித்துள்ளார்.

இந்த நோய் அறிகுறிகள் தென்படுமாயின் சிறுவர்களை
பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவ்வாறானவரகளை
வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறும் குழந்தை நல
வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கோரிக்கை
விடுத்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles