NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கெனுலாவில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கெனுலாவினால் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக நோயாளி ஒருவர் நேற்று (13) உயிரிழந்துள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவி மேலாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த குறித்த நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த கெனுலாவில் இருந்து பக்டீரியா தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காய்ச்சலினால் காலி பிரதேசத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு பொருத்தப்பட்டிருந்த கெனுலாவில் தொற்று ஏற்பட்டு கிருமிகளை உட்கொண்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இருதய நோயாளர் என்பதால் வேறு வைத்தியசாலைக்கு மாற்ற வைத்தியர்கள் முயன்ற வேளையில், கெனுலாவில் ஏற்பட்டிருந்த பக்டீரியா தொற்று மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles