NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (19) இரவு முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (20) இரவு 08.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொழும்பு 04, 05, 07 மற்றும் 08 ஆகிய இடங்களில் நீரி விநியோகம் தடைப்படுவதுடன், கொழும்பு புறநகர்களான கோட்டே மற்றும் கடுவெல நகரசபை பகுதிகளுக்கும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபை பகுதிகளுக்கும் இதே காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles