NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பின் பிரதான வீதிகள் சிலவற்றிற்கு இன்று முதல் பூட்டு!

கொழும்பின் சில வீதிகள் இன்று (05) முதல் மூடப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிதெரு பகுதிகளில் உள்ள சில வீதிகள் இன்று முதல் 03 கட்டங்களாக மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து தடை தொடர்பில் மேலும் தெரியவருகையில், நிலத்தடி குழாய்கள் பதிக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாலேயே குறித்த வீதிகள் முடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, உத்தரானந்த மாவத்தை, நவம் மாவத்தை முதல் தொடருந்து கடவை வரையிலான பகுதி இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை முதல் நவம் மாவத்தை வரையிலான பகுதி பெப்ரவரி 20 முதல் மார்ச் 04 வரையிலும் மூடப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை வழியாக ரொட்டுண்டாகார்டன் சந்தி வரையான பகுதி மார்ச் 05 முதல் 11 வரை மூன்றாம் கட்டமாக மூடப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.  

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles