NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை கைப்பற்ற ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்.!!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பலத்த போட்டி நிலவி வருகிறது. 48 உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி 29 உறுப்பினர்களை வென்றுள்ளது. கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை கைப்பற்ற ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பு இரு கட்சிகளுக்கும் தற்பொழுது அவசியமாக உள்ளது. எனவே, தற்போது பெரிதும் பேசும் பொருளாகியுள்ள கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றப்போகும் கூட்டணி எது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles